ஆப்நகரம்

சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்த திலீப்!

நடிகர் திலீப் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார்.

TNN 20 Oct 2017, 4:25 pm
நடிகர் திலீப் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார்.
Samayam Tamil actor dileep visit sabarimala ayappa dharshan
சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்த திலீப்!


பிரபல மலையாள நடிகை வழக்கில் கைதாகி 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நடிகர் திலீப், கடந்த அக்-5ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார். அதையடுத்து தான் நடித்து பாதியிலேயே நின்ற கம்மார சம்பவம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் திலீப்.

இந்தநிலையில் சிறப்பு புலனாய்வு குழு கூட்டம் இன்று திலீப் வழக்கு குறித்த அடுத்தகட்ட விசாரணைக்காக ஒன்று கூடியுள்ளது. இந்தகூட்டத்தின் முடிவில், திலீப் தற்போதுள்ள 11வது குற்றவாளி என்கிற நிலையில் இருந்து முதன்மை குற்றவாளியாக மாற்றப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத நடிகர் திலீப், ஐப்பசி மாதம் நடைதிறக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று காலை சபரிமலைக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார். அப்படியே அருகே இருந்த மாளிகைப்புறத்தம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்த திலீப், சபரிமலை மேல்சாந்தியையும் சந்தித்து ஆசி பெற்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்