ஆப்நகரம்

நடிகை கடத்தல் வழக்கு: 4வது முறையாக திலீப்பின் ஜாமீன் மனு தள்ளுபடி

நடிகையைக் கடத்தி, பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் நடிகர் திலீப் கடந்த ஜூலை 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதில் ஜாமீன் கேட்டு அவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

TNN 18 Sep 2017, 1:48 pm
கேரளா: நடிகையைக் கடத்தி, பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் நடிகர் திலீப் கடந்த ஜூலை 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதில் ஜாமீன் கேட்டு அவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Samayam Tamil actor dileep who got arrested in the actress kidnapping case denied bail
நடிகை கடத்தல் வழக்கு: 4வது முறையாக திலீப்பின் ஜாமீன் மனு தள்ளுபடி


ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீப், ஜாமீன் கேட்டு அங்கமாலி நீதிமன்றத்திலும், கேரளா உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு மீண்டும் 4வது முறையாக நடிகர் திலீப் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். கடைசியாக திலீப், தந்தை நினைவு நாளின்போது பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Dileep who got arrested in the Actress kidnapping case, denied bail by the kerala high court.

அடுத்த செய்தி

டிரெண்டிங்