ஆப்நகரம்

காயத்தை பொருட்படுத்தாமல் நடித்த நடிகர்!

படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்தார் நடிகர் ராண்டில்யா.

TNN 16 Jan 2017, 6:26 pm
படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்தார் நடிகர் ராண்டில்யா.
Samayam Tamil actor does not care about his injury while acting
காயத்தை பொருட்படுத்தாமல் நடித்த நடிகர்!


நடிகர் ராண்டில்லா, ‘வன்மம்’, ‘நையப்புடை’,‘மையம்’, ‘வெள்ளிக்கிழமை 13-ந்தேதி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘ஒருதடவை பார்க்கலாம்’, ‘143’, ‘தங்கரதம்’, ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஐதராபாத்தில் 143’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் படத்தில் சேஸிங் காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனையும் பொருட்படுத்தாது அதே காட்சியில் தொடர்ந்து நடித்துக் கொடுத்தார் ராண்டில்யா.

இந்தப் படம் பற்றி ராண்டில்யா கூறுகையில், ‘143’ படத்தை ரிஷி இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். நடிகர் ராஜவர்மன் வில்லனாக நடிக்கிறார். அவரது ட்ராக்கில்தான் நானும் நடித்திருக்கிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்திலுள்ள ஒரு சாலையில் நடந்தது. அப்போது ஹீரோவை நான் துரத்திக்கொண்டு ஓடும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நான் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டேன். எனது கை கால்களில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.

இதனால் சிறிது நேரம் படப்பிடிப்பு ஸ்தம்பித்தது. இருப்பினும், நான் உடனடியாக அந்த காட்சியில் மீண்டும் நடிக்க தயாராகி விட்டேன். என்னைப்பொறுத்தவரை எந்த மாதிரியான ரிஸ்க்கான காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். சினிமாவில் பெரிய வில்லனாக வேண்டும் என்பதே எனது நோக்கம்’’ என்கிறார் ராண்டில்யா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்