ஆப்நகரம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 500 கன்றுகள் வழங்கிய நடிகர்!

நாகை: நடிகர் ஜிவி பிரகாஷ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கன்றுகள் வழங்கி உதவி செய்துள்ளார்.

Samayam Tamil 2 Dec 2018, 4:50 pm
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அரசும், தன்னார்வ குழுக்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
Samayam Tamil GV Prakash


இருப்பினும் பொதுமக்களால் தங்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பின் சோகத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை. அவர்கள் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், உளவியல் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கலப்பை மக்கள் இயக்கம் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 500 பசுக் கன்றுகளை வழங்கியது. இதற்கான ஏற்பாடுகளை பிடி செல்வகுமார் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு கன்றுகள் வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், மத்திய, மாநில அரசுகள் மெத்தன் போக்கை கடைபிடிப்பதாக குற்றம்சாட்டினார்.

மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை விரைவு படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்