ஆப்நகரம்

பாலியல் குற்றங்களை தடுக்க ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் படக்குழு அதிரடி நடவடிக்கை!

நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் படக்குழுவினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Samayam Tamil 8 Apr 2019, 12:53 pm
நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், ஜிவி பிரகாஷின் வாட்ச்மேன் படக்குழுவினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Samayam Tamil gv


இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், யோகி பாபு, சாயிஷா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாட்ச்மேன். வரும் 12ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், அண்மையில், இப்படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடந்தது. இதில், ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர், இயக்குனர் என்று படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் கூறுகையில், இப்படம் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான விளம்பரம் வித்தியாசமான முறையில் நடந்து வருகிறது. ஆம். பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டனர். இனிமேல், இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில், பொள்ளாச்சியின் முக்கிய இடங்களில் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்த இருக்கின்றனர். வாட்ச்மேன் பொள்ளாச்சி நகரத்தையே கண்காணிப்பார் என்று அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.


இவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் கூறுகையில், பொள்ளாச்சியில் நாங்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது வெறும் தொடக்கம் மட்டுமே. இது போன்ற பல நல்ல விஷயங்களை நாங்கள் செய்ய இருக்கிறோம். வெயில் காலம் என்பதால், சிறு வியாபாரிகளுக்கு குடை அமைத்து தர இருக்கிறோம். சிசிடிவி கேமராக்களால் தான் சென்னையில் குற்றங்கள் குறைந்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து வாட்ச்மேன் ஜிவி பிரகாஷ் கூறுகையில், நாங்கள் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். நீங்கள் பெண்களின், பாதுகாப்புக்கு என்று புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள். உங்களுக்காக என்னால், முடிந்த உதவிகளை நான் செய்வேன். நாச்சியார், சர்வம் தாளமையம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படம் எனக்கு பேர் கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், வரும் 10ம் தேதி பொள்ளாசியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், ஜிவி பிரகாஷ், இயக்குனர் ஏஎல்.விஜய் ஆகியோர் பலர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்