ஆப்நகரம்

‘மாநாட்டில்’ சிம்புவுடன் கைகோர்க்கும் நடிகர் ஜெய்!

இயக்குனர் வெங்கட்பிரபு சிம்புவை வைத்து இயக்கவுள்ள ‘மாநாடு’ படத்தில் நடிகர் ஜெய்யும் இணைந்து நடிக்கிறார்.

Samayam Tamil 14 Feb 2019, 3:14 pm
நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இந்தப் படம் ‘ஏஏஏ’ படத்தைப் போன்று மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது. அடுத்ததாக நடிகர் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். படத்தின் பெயர் ‘மாநாடு’. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கவுள்ளார் சிம்பு. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
Samayam Tamil maanadu


இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தில் சிம்புவுடன் நடிகர் ஜெய்யும் இணைந்து நடிக்கவுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜெய் ஏற்கனவே சிம்புவின் ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்க இருந்தனர். ஆனால், அறிவித்தபடியே படம் அப்படியே முடங்கிப் போனது. தற்போது ‘மாநாடு’ படத்தின் மூலம் கைகோர்த்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்