ஆப்நகரம்

நிதின் சத்யா தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் ஜெய்!

நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

TNN 5 Oct 2017, 3:34 pm
நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
Samayam Tamil actor jai will act in nithin sathya production
நிதின் சத்யா தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் ஜெய்!


வெங்கட்பிரபு இயக்கிய‘சென்னை 28’ படத்தில் நிதின் சத்யாவும், ஜெய்யும் இணைந்து நடித்தனர். அந்த டீம் தற்போதுவரை நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தில் கூட இருவரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில், நடிகராக இருந்த நிதின் சத்யா தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் தயாரிப்பில் முதலில் ஹீரோவாக நடிக்க இருப்பவர் நடிகர் ஜெய். படத்தில் ஜெய்க்கு ஜோடியாக மலையாள நடிகை ரெபா மோனிகாஜான் நடிக்கிறார். இவர் இதற்கு முன் ‘ஜேக்கப்பிண்டே ஸ்வர்கராஜ்யம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். ஏற்கெனவே புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது.

தற்போது சுந்தர்.சி இயக்கும் ‘கலகலப்பு 2’ படத்தில் ஜெய் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நேற்று முதல் காரைக்குடியில் நடந்து வருகிறது. இந்தப் படம் முடிந்ததும், நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் ஜெய் நடிக்க இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்