ஆப்நகரம்

இந்த மாதிரி ஆளுங்க ஆபத்தானவங்க.. உஷாரா இருங்க: எச்சரிக்கும் ஜெயம் ரவியின் மனைவி.!

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 20 May 2022, 6:13 pm
Samayam Tamil Jayam Ravi
Jayam Ravi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் ஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தனது அடுத்த படங்களுக்கான வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் ஜெயம் ரவி.

’பூமி’ படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வந்தார். அண்மையில், இந்தப்படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘பூலோகம்’ படத்தின் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆனார் ஜெயம் ரவி.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஜெயம் ரவியின் 28வது படமான இதற்கு ‘அகிலன்’ என பெயரிடப்பட்டுள்ளது. ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கும் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து சிவா மனசுல சக்தி’, பாஸ் (எ) பாஸ்கரன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ராஜேஷ் படத்தில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி.

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி எப்போதும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருப்பார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், உங்களை சுற்றி பொறாமை குணம் கொண்டவர்கள் இருப்பது மிகவும் ஆபத்தானது. நீங்கள் அவர்களை குடும்பத்தில் ஒருவராக அல்லது நண்பர்களாக பார்த்தாலும் அவர்கள் உங்களை போட்டியாகவே பார்ப்பார்கள்.

இப்படி பண்ணாதீங்க.. கெட்ட வார்த்தைல திட்டுறாங்க: கடுப்பான சினேகனின் மனைவி.!
இறுதியில் இந்த பிரபஞ்சம் அவர்களை களை எடுக்கும். நீங்கள் போராட வேண்டாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆர்த்தி யாரை குறிப்பிட்டு இவ்வாறு பதிவிட்டுள்ளார், யாரையோ மறைமுகமாகவே தாக்கியுள்ளார் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்