கடந்த 2015ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையால் சென்னை மாநகரம் முற்றிலும் சிதைந்து போகும் அளவிற்கு வெள்ளம் சூழ்ந்தது. இதில், அதிகப்படியாக பாதிக்கப்பட்டது என்னவோ மடிப்பாக்கம் ஏரியா தான். இதனை ஞாபகப்படுத்தும் வகையில் சென்னையில் மீண்டும் வெள்ளம் வரப்போகிறது. ஆம், ஜெயம் ரவியால் தான் இந்த வெள்ளம் வருகிறது என்கிறது படக்குழு. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி. இப்படத்தில் ஜெயம் ரவி 9 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதற்கான 9 லுக் போஸ்டரும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், இப்படத்திற்காக கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் வந்த வெள்ளத்தை மீண்டும் உருவாக்கியுள்ளனர். இது குறித்து இப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், இப்படத்திற்காக சென்னை வெள்ளத்தை மீண்டும் உருவாக்கம் செய்துள்ளோம். இதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் செட் அமைத்தோம். சென்னை வெள்ளத்திற்காக 20 நாட்களுக்கு முன்பே அந்த செட்டில் தொட்டி கட்டினோம். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மடிப்பாக்கம் ஏரியாவைத்தான் மீண்டும் உருவாக்கம் செய்தோம்.
ஆனால், அப்போது மே மாதம் கோடை விடுமுறை என்பதால், போதுமான தண்ணீர் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால், கடல் நீரையே வெள்ளத்திற்கு பயன்படுத்தினோம். இதற்காக இரவும் பகலுமாக 4 நாட்கள் தொடர்ந்து பணியாற்றினோம் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக அண்மையில் வெளியான ஹவுஸ் ஓனர் படம் மீண்டும் 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தை ஞாபகப்படுத்தியது. இப்படத்தை இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அப்போது மே மாதம் கோடை விடுமுறை என்பதால், போதுமான தண்ணீர் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால், கடல் நீரையே வெள்ளத்திற்கு பயன்படுத்தினோம். இதற்காக இரவும் பகலுமாக 4 நாட்கள் தொடர்ந்து பணியாற்றினோம் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக அண்மையில் வெளியான ஹவுஸ் ஓனர் படம் மீண்டும் 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தை ஞாபகப்படுத்தியது. இப்படத்தை இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.