ஆப்நகரம்

சக கலைஞனாக மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

மறைந்த நடிகர் நாகேஷிற்கு மரியாதை செய்ய வலியுறுத்தி தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.

Samayam Tamil 28 Sep 2021, 11:26 am
நகைச்சுவை, குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பால் அசத்தியவர் நடிகர் நாகேஷ். தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான இவர் கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி காலமானார். இந்நிலையில் நேற்றைய தினம் நினைவு நாளை முன்னிட்டுப் பலரும் அவருடனான நினைவுகளை பகிர்ந்தனர்.
Samayam Tamil Kamal Haasan
Kamal Haasan


இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மறைந்த நாகேஷிற்கு மரியாதை செய்ய வலியுறுத்தி தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ் இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களில் ஒருவர். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் அவரது நடிப்பு ஊடகங்களால் புகழப்பட்டது.

1958-ல் 'மனமுள்ள மறுதாரம்' படத்தில் அறிமுகமாகி 2008-ல் 'தசாவதாரம்' வரை மிகச்சரியாக அரை நூற்றாண்டுகள் நீடித்தது அவரது கலைப் பயணம். எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதோ, விருதுகள், அங்கீகாரங்களுக்கோ ஆள் பிடிப்பதோ நாகேஷின் இயல்பல்ல. அதன் பொருட்டே வாழும்போதும் வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் அவர்.

கமாண்டராக சிவகார்த்திகேயன் நடத்தும் ஆப்ரேஷன்: வெளியானது 'டாக்டர்' டிரெய்லர்!
1974-ல் தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது, 1994-ல் 'நம்மவர்' திரைப்படத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் சிறந்த துணை நடிகர் விருது ஆகியவைதான் அவரது கலை வாழ்வில் கிடைத்த சிறு அங்கீகாரங்கள். என்னைப் பொறுத்தவரையில் சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியானவர் நாகேஷ்

இவர் பிரான்ஸிலோ, அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிறந்திருந்தால் இவர் பெற்றிருந்திருக்கக் கூடிய கவுரவம் என்னவாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துப் பார்க்கிறேன். அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர் மீதான அரசின் புறக்கணிப்பு தொடர்வது ஒரு சக கலைஞனாக எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.


இந்த மகத்தான நடிகரின் கலைப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதும், அவரது பெயரில் ஒரு விருதினைத் தோற்றுவிப்பதும், எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்திற்குள் அவரது சிலையை அமைப்பதும் குறைந்தபட்ச அங்கீகாரங்களாக அமையும். கலைஞர்களைப் போற்றுவதும் நல்லரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்