ஆப்நகரம்

கோவாவில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய கார்த்தி!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி ஜோதிகா மற்றும் சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோவாவில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 29 Apr 2019, 10:30 am
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி ஜோதிகா மற்றும் சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோவாவில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
Samayam Tamil K3


தேவ் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி என்ற படத்திலும், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தில், இவருடன் இணைந்து சத்யராஜ் மற்றும் ஜோதிகா இருவரும் நடிக்கின்றனர்.

இதில், கார்த்தி மற்றும் ஜோதிகா இருவரும் அக்கா தம்பியாகவும், சத்யராஜ் இருவருக்கும் அப்பாவாகவும் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. அன்சன் பால் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். பேரல்ஸ் மைண்ட்ஸ் புரோடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவிம் தம்பி சூரஜ் இப்படத்தை தயாரிக்கிறார். கார்த்தியின் 20ஆவது படமாக உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் கிட்டத்தட்ட 45 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திகில், அதிரடி மற்றும் குடும்ப உறவுகளை மையப்படுத்திய படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தி அல்லது ஆயுத பூஜையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்