ஆப்நகரம்

இப்போதும் இதை பார்க்கிறேன்: கொரோனாவுக்காக சென்னை மக்களை விமர்சித்த நடிகர் கார்த்தி

கொரோனா நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வரும் நிலையில், மக்கள் எச்சரிக்கையை மீறி செய்துள்ள செயல் பற்றி கார்த்தி விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 18 Mar 2020, 7:49 pm
கொரோனா நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வரும் நிலையில், மக்கள் எச்சரிக்கையை மீறி செய்துள்ள செயல் பற்றி கார்த்தி விமர்சித்துள்ளார்.
Samayam Tamil Karthi


உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் கிட்டத்தட்ட முடங்கிவிட்டன. மக்கள் பொது இடங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தியேட்டர்கள், மால்கள், பெரிய கடைகள், கோவில்கள், பூங்காக்கள் அனைத்தும் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளன.

மேலும் சற்றுமுன் சென்னையில் கோரோனா தோற்று உடன் இருக்கும் இரண்டாவது நபர் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்த நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார். இருப்பினும் கடற்கரையில் இப்போதும் கூட்டம் இருப்பதை பார்க்கிறேன் என சென்னை மக்கள் மனநிலை பற்றி பேசியுள்ளார் அவர்.

"அரசு, மருத்துவமனைகள், முக்கியமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து நம்மை COVID19ல் இருந்து நம்மை பாதுகாத்து வருகின்றனர். மக்கள் கடற்கரையில் கூட்டமாக இருப்பதை தற்போதும் என்னால் பார்க்க முடிகிறது. நாம் ஒன்றுசேர்ந்து தான் கொரோனாவை சமாளிக்க வேண்டும். வீட்டிலேயே இருங்கள் மற்றும் சுத்தமாக இருங்கள்" என கார்த்தி ட்விட் செய்துள்ளார்.



கார்த்தி மட்டுமின்றி பல்வேறு பிரபலங்களும் அரசின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளனர். நடிகர் விவேக் போட்டுள்ள ட்விட்டில் "8 கோடி மக்கள்! 3 அண்டை மாநில எல்லைகள்! தினம் விமான வழியில் ஆயிரக்கணக்கான பயணிகள்! சவால்களை எதிர் கொண்டு பணிபுரியும் அமைச்சர், சுகாதாரத் துறை, தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியருக்கும் நெஞ்சு நெகிழ் நன்றி சொல்வோமா?" என கேட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்