ஆப்நகரம்

அண்ணனுடன் எடுத்து கொண்ட முதல் செல்பி: சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து பகிர்ந்த கார்த்தி!

நடிகர் சூர்யாவுடன் முதல் முறையாக எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் கார்த்தி.

Samayam Tamil 23 Jul 2021, 3:37 pm
நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள்முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவின் சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்திக் தனது இணையத்தள பக்கத்தில் தனது அண்ணன் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Suriya_Karthi
Suriya_Karthi


சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் கார்த்தி. அதில் சூர்யா நடித்த திரைப்படங்களில் இடம்பெறும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சூர்யா அளித்த சில பேட்டிகள் உள்ளிட்டவை அந்த வீடியோவில் அடங்கியுள்ளது. சுமார் எழு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து எனக்கு தேவையில்லை.. எப்படி வாழனும்னு எனக்கு தெரியும்: ப்ரியா வாரியர் காட்டம்!
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் கார்த்தி. தனது அண்ணனுடன் எடுத்து கொண்ட அந்த புகைப்படத்திற்கு கீழே, நாங்கல் முதன்முதலாக எடுத்து கொண்ட செல்பி இது என்றும், கடந்த 2019ஆம் ஆண்டு எடுத்து கொண்ட புகைப்படம் என்றும் குறிப்பிட்டுள்ளார் கார்த்தி. பாரிஸ் நகரில் உள்ள ஈஃபிள் டவர் அருகில் எடுக்கப்பட்ட இந்த செல்பி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு நேற்று 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இன்று மாலை 'சூர்யா 39' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்