ஆப்நகரம்

சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த கார்த்தி : ரசிகர்களுக்கு நன்றி

சினிமாவில் ஹுரோவாக நடிக்க வந்து பத்து ஆண்டுகள் ஆனநிலை நடிகர் கார்த்தி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

TNN 24 Feb 2017, 2:25 am
சென்னை : சினிமாவில் ஹுரோவாக நடிக்க வந்து பத்து ஆண்டுகள் ஆனநிலை நடிகர் கார்த்தி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actor karthi thanks to her fans
சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த கார்த்தி : ரசிகர்களுக்கு நன்றி


பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும் , சூர்யாவின் தம்பியுமான கார்த்தி 2007-ம் ஆண்டு பருத்தி வீரன் என்றச் படத்தின் மூலமாக ஹுரோவாக அறிமுகமானார். இந்த படத்தை அமீர் இயக்கி இருந்தார். முதல் படத்திலேயே கார்த்தி தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இந்த நிலையில் அவர் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் நிறைவானதையடுத்து தனது ரசிகர்களுக்கு டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,"பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பருத்திவீரன் வெளியானது. அதில் இருந்து நீங்கள் அனைவரும் என் மீது பாசம் வைத்துள்ளீர்கள். வாழ்க்கை ஏற்றம், இறக்கம் ஏற்பட்டாலும் நீங்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து என் வாழ்க்கையை அழகாக ஆக்கியுள்ளீர்கள். உங்களின் அன்புக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

#ThankYouAll #DreamComeTrue #10yearsinFilmIndustry pic.twitter.com/1zqueWCUtG — Actor Karthi (@Karthi_Offl) February 23, 2017 தொடர்ந்து நான் கடினமாக உழைப்பேன். அண்ணா கடவுள், குடும்பம், அண்ணா, என் இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், சக கலைஞர்கள், மீடியா நண்பர்கள், பாண்டியன் மாஸ்டர், தியேட்டர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் என் அருமை ரசிகர்களுக்கு நன்றி" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
actor karthi thanks to her fans

அடுத்த செய்தி

டிரெண்டிங்