ஆப்நகரம்

மன வருத்தத்தில் இருக்கும் நடிகர் கதிர்!

‘சிகை’ படத்தால் தற்போது நடிகர் கதிர் அதிக மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 10 Jan 2019, 1:32 pm
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மக்களை ஈர்த்த இந்த படம் 2018 ன் நல்ல கதையம்சம் கொண்ட படம் என்று சொல்லலாம். இந்தப் படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருந்தார்.
Samayam Tamil sigai


இந்நிலையில் கதிர் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘சிகை’. இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள் சமூகத்தில் எப்படியான பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். சஸ்பென்ஸ் கிரைம் படமான இப்படத்தை விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன் வரவில்லையாம்.

இதனால் தயாரிப்பாளர் ஜி 5 ஆப்பிற்கு விற்றுவிட்டாராம். இதனால் படம் தியேட்டரில் வராமல் நேரடியாக அந்த செயலியில் வந்துவிட்டது. இந்தப் படத்தை நேற்றே தமிழ் ராக்கர்ஸில் வெளியிட்டுள்ளன.

‘சிகை’ படத்தை நடிகர் கதிர் தன் சினிமா நண்பர்களுக்கு போட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த அவர்கள் தியேட்டர்களில் படத்தை வெளியிட்டிருந்தால் ‘ராட்சசன்’ படம் போல ‘சிகை’ படமும் ஹிட்டாகியிருக்கும் என கூறியுள்ளார்கள். தான் மிகவும் எதிர்பார்த்த இப்படம் இப்படி ஆகிவிட்டதே என அதிக மன வருத்தத்தில் இருக்கின்றாராம் நடிகர் கதிர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்