ஆப்நகரம்

தொழிலதிபர் மகளை மணமுடித்தார் ‘மதயானைக்கூட்டம்’ கதிர்!

`மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கதிர், ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்துள்ளார்.

Samayam Tamil 5 Mar 2018, 11:42 am
`மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கதிர், ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்துள்ளார்.
Samayam Tamil actor kathir married a business mans daughter in erode on sunday
தொழிலதிபர் மகளை மணமுடித்தார் ‘மதயானைக்கூட்டம்’ கதிர்!


`மதயானைக் கூட்டம்’ படத்தில் அறிமுகமானவர் நடிகர் கதிர். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதைத் தொடர்ந்து கிருமி, என்னோடு விளையாடு உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘விக்ரம் வேதா’ படமும் இவருக்கு மேலும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

இந்நிலையில், நடிகர் கதிர் ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளைத் திருமணம் ஞாயிற்றுக்கிழமையன்று திருமணம் செய்துகொண்டார். ஈரோட்டில் நடைபெற்ற இவர்களது திருமண விழாவில் இயக்குநர் அட்லி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர்.

இதேபோல், குணசித்திர நடிகரான ரமேஷ் திலக் மற்றும் ஆர்ஜே நவலட்சுமிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்