ஆப்நகரம்

இனிமேல் என்னை இப்படித்தான் கூப்பிட வேண்டும்: கயல் ஹீரோ!

என்னை இனிமேல் இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று பிரபல ஹீரோ சந்திரன் கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Jan 2019, 4:42 pm
என்னை இனிமேல் இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று பிரபல ஹீரோ சந்திரன் கூறியுள்ளார்.
Samayam Tamil kayal


இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கயல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சந்திரன். இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ஹீரோவாக அறிமுகமானார். அதன் காரணமாக கயல் சந்திரன் என்று அழைக்கப்படுகிறார். அதே போன்று தான் ஆனந்தியும். இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்தார். இவரும் அப்படித்தான் கயல் ஆனந்தி என்றே அழைக்கப்படுகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் வந்த ரூபாய் என்ற படத்தில் நடித்தார். தற்போது இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் பார்ட்டி, கிரகணம், திட்டம் போட்டு திருடுற கூட்டம் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இவரது முழுப்பெயர் சந்திரமௌலி. ஆனால், படங்களுக்காக சந்திரன் என்றே பெயர் மாற்றம் செய்து கொண்டார். தற்போது படங்களிலும் சந்திரமௌலி என்று இருக்கும் என்றும், அதனால், தனது பெயரை சந்திரன் என்பதற்குப் பதிலாக சந்திரமௌலி என்றே குறிப்பிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்