ஆப்நகரம்

சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்: நடிகர் சுதீப் புகழாரம்!

'சூரரைப் போற்று' திரைப்படம் குறித்தும், நடிகர் சூர்யா குறித்தும் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் பெருமையாக பேசியுள்ளார்.

Samayam Tamil 26 Jul 2021, 12:27 pm
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற இந்தப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது.
Samayam Tamil Kiccha_Sudeep
Kiccha_Sudeep


கடந்த ஆண்டு நவம்பர் நவம்பர் மாதம் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த இந்த திரைப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்து பாராட்டினார்கள். சூர்யாவின் கம்பேக் திரைப்படமாக அவரின் ரசிகர்களால் இந்தப்படம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இந்தப்படம் குறித்து, சூர்யாவின் நடிப்பு குறித்தும் தனியார் வானொலி ஒன்றுக்கு பிரபல கன்னட நடிகர் சுதீப் பேட்டி அளித்துள்ளார். அதில், கடைசியாக ஓடிடியில் 'சூரரைப் போற்று' படம் பார்த்தேன். உண்மையை சொல்லவேண்டுமென்றால் சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர் அதற்கு தகுதியானவர். நான் சந்தித்த அரிய மனிதர்களில் அவரும் ஒருவர். அவர் மிகவும் நேர்மையானவர். அவரிடம் போலித்தனம் கிடையாது. அப்படத்தில் அவருடையது பிழையில்லாத நடிப்பு என்று சொல்வேன்.

'காசேதான் கடவுளடா' பட ரீமேக்கில் இணைந்த குக் வித் கோமாளி புகழ்!
ஒரு படத்தை பார்ப்பது வேறு, ஆனால் அதை ஒரு கதையாக படிப்பது வேறு. ஒரு கதையை வைத்து அதில் நடிப்பது குறித்து தீர்மானிப்பது மிகவும் கடினம். அதுமட்டுமின்றி இது வழக்கமான ஒரு ஹீரோயிசம் கொண்ட படம் கிடையாது. கேரியரில் உச்சத்தில் உள்ள ஒரு காலகட்டத்தில் இப்படி ஒரு கதையை தேர்வு செய்வதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் சூர்யாவிற்கு இருந்துள்ளது என கூறியுள்ளார் சுதீப்.

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை உருவாக்க உள்ளனர். தமிழில் இந்தப்படத்தை இயக்கிய சுதா கொங்கரோவே இந்தியிலும் இயக்க உள்ளார். சூர்யா நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்