ஆப்நகரம்

ஐயப்ப பக்தியால் கொலைவெறி வந்துவிட்டது: நடிகர் விளக்கம்

யோசித்துப் பார்க்கும்போது ஒரு பிரமுகராக இருந்துகொண்டு பொது இடத்தில் அப்படிப் பேசியிருக்கக் கூடாது எனத் தோன்றியது. அதற்கு முழு மனதான மன்னிப்பு கோருகிறேன்.” என்று கூறியிருக்கிறார் கொல்லம் துளசி.

Samayam Tamil 13 Oct 2018, 7:24 pm
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும பெண்களை வெட்டிப்போட வேண்டும் எனப் பேசிய மலையாள நடிகர் கொல்லம் துளசி ஐயப்பன் மீதுள்ள அதிக பக்தியால் அப்படிப் பேசியதாக விளக்கியுள்ளார்.
Samayam Tamil DpYkNUFW4AAIHIn


10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அனுமதி வழங்கக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து வரும் 18ஆம் தேதி முதல் பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் முக்கியப பிரமுகர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் மலையாள நடிகர் கொல்லம் துளசி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “சபரிமலைக்கு பெண்கள் வந்தால் அவர்களை பாதியாக வெட்டிப்போட வேண்டும். ஒரு பாதியை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். இன்னொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வீச வேண்டும்.” எனக் கூறினார்.
இதனால் கொல்லம் துளசியின் இந்த பேச்சுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் கடுமையான கண்டனம் கிளம்பியுள்ள நிலையில், “சபரிமலை ஐயப்பன் மீது எனக்கு உள்ள அபரிமிதமான பக்தியால் அப்படிப் பேசிவிட்டேன். பின் யோசித்துப் பார்க்கும்போது ஒரு பிரமுகராக இருந்துகொண்டு பொது இடத்தில் அப்படிப் பேசியிருக்கக் கூடாது எனத் தோன்றியது. அதற்கு முழு மனதான மன்னிப்பு கோருகிறேன்.” என்று கூறியிருக்கிறார் கொல்லம் துளசி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்