ஆப்நகரம்

தற்கொலை இல்லை மாரடைப்பால் மரணம்: நடிகரின் குடும்பம் விளக்கம்

சந்திப்போம் சிந்திப்போம் படத்தில் நடித்த நாமக்கல்லை சேர்ந்த குமாரராஜன் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியானது. ஆனால் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 13 Apr 2021, 1:14 pm

ஹைலைட்ஸ்:

  • நடிகர் குமாரராஜன் தற்கொலை செய்யவில்லை- குடும்பத்தார்
  • சந்திப்போம் சிந்திப்போம் படத்தில் நடித்தவர் குமாரராஜன்
  • கெரியரால் மன வேதனையில் இருந்தாராம் குமாரராஜன்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil suicide
நாமக்கல்லில் இருக்கும் கங்கா நகரை சேர்ந்தவர் குமாரராஜன்(39). சந்திப்போம் சிந்திப்போம் என்கிற படத்தில் துணை நடிகராக நடித்தவர். அவர் குடும்பத்துடன் நாமக்கல்லில் வசித்து வந்தார். தன் கெரியர் நினைத்தபடி இல்லை என்கிற கவலையில் இருந்தாராம்.
அவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்ததாம். மது விவகாரம் தொடர்பாக குமாரராஜனுக்கும், அவரின் மனைவி சிந்துஜாவுக்கும்(35) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தன் வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொல செய்து கொண்டார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து அவரின் குடும்பத்தார் கூறியிருப்பதாவது,

குமாரராஜன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர் மாரடைப்பால் தான் மரணம் அடைந்தார். உண்மை தெரியாமல் பேச வேண்டாம் என்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்