ஆப்நகரம்

அதே தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் மகேஷ்பாபு!

‘பிரம்மோற்சவம்’ என்ற தோல்வி படத்தை கொடுத்த அதே நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் மகேஷ்பாபு நடிக்கவுள்ளார்.

TOI Contributor 31 Oct 2016, 3:52 pm
‘பிரம்மோற்சவம்’ என்ற தோல்வி படத்தை கொடுத்த அதே நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் மகேஷ்பாபு நடிக்கவுள்ளார்.
Samayam Tamil actor mahesh babu will be acting in the same film production company
அதே தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் மகேஷ்பாபு!


தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மகேஷ்பாபு, பிவிபி நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கிறார். படத்தை பூரி ஜெகன்நாத், கொரட்டாலா சிவா, வம்சி உள்ளிட்ட இயக்குனர்களில் ஒருவர் படத்தை இயக்கக்கூடும் என்று கூறப்பட்டது. தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாக தெரிகிறது. படத்தை மீண்டும் பிவிபி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் முதல் கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், ஜூன் மாதத்தில் இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் துவங்கும் எனவும் பிவிபி நிறுவனம் அறிவித்துள்ளது. பிவிபி நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கில் ‘தோழா’ எனும் வெற்றிப் படத்தைக் கொடுத்தது. இப்படத்தை இயக்கிய வம்சி மீண்டும் அந்நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

அதே போல் மகேஷ் பாபு நடித்த ‘பிரம்மோற்சவம்’ படத்தை பிவிபி நிறுவனம் தயாரித்திருந்தது. படம் தோல்வியை கண்டது. ‘பிரம்மோற்சவம்’ தோல்விக்குப் பின்னரும் மகேஷ் பாபுவுக்கு பிவிபி நிறுவனம் தயாரிப்பில் நடிக்க வாய்ப்பளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்