அரசுக்கு செலுத்த வேண்டிய சேவை வரி பாக்கியை செலுத்ததால், பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் இரண்டு வங்கி கணக்குகள் ஜிஎஸ்டி அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.
தெலுங்கு திரையுலகில் இளம் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவருக்கு தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் தமிழிலும் உள்ளனர். இவர் கடந்த 2007-08ஆம் ஆண்டுகளுக்கான சேவை வரி செலுத்தவில்லை என்று ஜிஎஸ்டி கமிஷனர் அலுலவகம் தெரிவித்துள்ளது. இவர் பாக்கி வைத்துள்ள தொகை ரூ. 18.5 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தற்போது வட்டி, முதல் என்று அனைத்தும் சேர்த்து ரூ. 73 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் அவரது ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஜிஎஸ்டி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடிகர் மகேஷ் பாபு 2007&-2008ம் ஆண்டில் சினிமா, விளம்பரப் படத்தில் நடித்து வந்த வருமானத்திற்காக சேவை வரி 18 லட்சத்து 50 ஆயிரத்தை இன்னும் கட்டவில்லை. இதுகுறித்து மகேஷ் பாபுவை சந்திக்க அதிகாரிகள் பலமுறை முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரது ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கணக்குகள் முடக்கப்படுகிறது. வரி மற்றும் வரிக்கு வட்டி, அபராதம் ஆகியவற்றை சேர்த்து அவர் 73 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும். அவரது ஆக்சிஸ் வங்கி கணக்கில் இருந்து 42 லட்சம் பெறப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி கணக்கில் இருந்து மீதித் தொகை பெறப்படும். வங்கி தர மறுத்தால் மகேஷ்பாபு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் கடந்த 2001ஆம் ஆண்டில் நடித்த முராரி படத்தின் மூலம் பிரபலமானவர் மகேஷ் பாபு. இவரை தெலுங்கு ரசிகர்கள் இளவரசர் அளவிற்கு கொண்டாடி வந்தனர். பிசினஸ்மேன், ஸ்ரீமந்துடு, பாரத் அனே நேனு ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக இவருக்கு அமைந்தன.
தெலுங்கு திரையுலகில் இளம் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவருக்கு தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் தமிழிலும் உள்ளனர். இவர் கடந்த 2007-08ஆம் ஆண்டுகளுக்கான சேவை வரி செலுத்தவில்லை என்று ஜிஎஸ்டி கமிஷனர் அலுலவகம் தெரிவித்துள்ளது. இவர் பாக்கி வைத்துள்ள தொகை ரூ. 18.5 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தற்போது வட்டி, முதல் என்று அனைத்தும் சேர்த்து ரூ. 73 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் அவரது ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் கடந்த 2001ஆம் ஆண்டில் நடித்த முராரி படத்தின் மூலம் பிரபலமானவர் மகேஷ் பாபு. இவரை தெலுங்கு ரசிகர்கள் இளவரசர் அளவிற்கு கொண்டாடி வந்தனர். பிசினஸ்மேன், ஸ்ரீமந்துடு, பாரத் அனே நேனு ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக இவருக்கு அமைந்தன.