ஆப்நகரம்

என்னிடம் இருந்து ரூ.1 கோடியை ஏமாற்றிய மிஷ்கின்; இளம் நடிகர் பகீர் புகார்!

சென்னை: தன்னை இயக்குநர் மிஷ்கின் ஏமாற்றி விட்டதாக நடிகர் மைத்ரேயா குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 26 Dec 2018, 4:52 pm
சித்திரம் பேசுதடி படத்தை இயக்கி, தமிழ் திரையுலகில் மிஷ்கின் அறிமுகமானார். இதையடுத்து அஞ்சாதே, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தனித்துவமான கதைக்களம் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.
Samayam Tamil Mysskin.


இந்நிலையில் இளம் நடிகர் மைத்ரேயா இயக்குநர் மிஷ்கின் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். தன்னை வைத்து படம் எடுப்பதாக சொல்லி ரூ.1 கோடி பணம் வாங்கிக் கொண்டார். ஆனால் அதே கதையை உதயநிதியை வைத்து எடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பான மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், கிரைம் திரில்லர் படம் எடுக்க மிஷ்கினுக்கு தடை விதித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மைத்ரேயன் அளித்த பேட்டியில், “மிஷ்கினுடன் 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தோம். துப்பறிவாளன் முடிந்ததும் படம் தொடங்கலாம் என்று சத்தியம் செய்தார்.

ஆனால் அதே கதையை வேறொரு ஹீரோவை வைத்து எடுக்கிறார். எங்கள் படத்திற்கு ரூ.3 கோடி சம்பளம் பேசினோம். அதில் ஒரு கோடியை அட்வான்சாக கொடுத்தோம். பலமுறை பேச முயற்சித்தும், அவர் முன்வரவில்லை.

இதற்கு தயாரிப்பாளர் சங்கம் மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில் அவர் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். ஆகையால் நீதிமன்றம் சென்றேன். விஷால் உதவி செய்வதாக கூறியுள்ளார். நான் அடுத்ததாக ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளேன்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்