ஆப்நகரம்

பிரபல தெலுங்கு நடிகர் சிறையில் அடைப்பு? - கடைசியிலே இப்படி ஆகிருச்சே!

பிரபல நடிகர் மோகன் பாபு செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும் ரூ. 41 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

Samayam Tamil 3 Apr 2019, 12:38 pm
பிரபல நடிகர் மோகன் பாபு செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும் ரூ. 41 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
Samayam Tamil Mohan Babu


ஆனால் இந்த செய்தியை மறுத்து மோகன் பாபு டுவிட் செய்ததோடு, விளக்கமும் அளித்துள்ளார்.
மோகன் பாபுவின் டுவிட்டில், “சில தொலைக்காட்சிகளில் என்னைப் பற்றிய சில தவறான செய்திகள். அதைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். நான் சிறையில் இல்லை, ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தான் இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ரூ. 41 லட்சம் செக் மோசடி:
நடிகரும், தயாரிப்பாளருமாக இருக்கும் மோகன் பாபு லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரின் தயாரிப்பில் 2009ம் ஆண்டு சலீம் என்ற படம் வெளியானது. சலீம் பட இயக்குனர் ஒய்.வி.எஸ்.சௌத்ரிக்கு 41 லட்சத்துக்கான காசோலையை வழங்கியதாகவும் அது பௌன்ஸ் ஆனதாகவும் கூறப்படுகிறது.

என்னா வெயிலு... வடிவேலுவின் அட்வைஸை கேட்ட காஜல் அகர்வால்

இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இது குறித்து விளக்கிய மோகன் பாபு, “தான் சலீம் படத்துக்காக இயக்குனருக்கு வழங்க வேண்டிய பணம் அப்போதே வழங்கிவிட்டேன்.



தொகுப்பாளினி அஞ்சனாவின் அசத்தல் புகைப்படங்கள்

சலீம் படத்தை தொடர்ந்து அடுத்த படம் எடுப்பதற்காக முன்பணமாக 41.71 லட்சம் ரூபாய்க்கான செக் தான் பவுண்ஸ் ஆனது.


லீம் படம் சரியாக போகாததால் அடுத்த படம் வேண்டாம், அந்த செக் வங்கியில் போட வேண்டாம் என கூறினேன். ஆனால் செளத்ரியோ வங்கியில் போட்டு விட்டு பவுண்ஸ் ஆகிவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

ராய் லக்‌ஷ்மியின் ஹாட் பிகினி புகைப்படங்கள்

இதுகுறித்த வழக்கின் மேல் முறையீடு செய்துள்ளோம். மேல்முறையீடு செய்துள்ளதால் மோகன் பாபுவை கைது செய்ய ஒரு மாதத்துக்கு தடை விதித்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்