ஆப்நகரம்

நடிகர் நானியை தன் படத்தில் இணைத்துக் கொண்ட மணிரத்னம்!

இயக்குனர் மணிரத்னம் அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் நானியையும் சேர்த்துக் கொண்டார்.

Samayam Tamil 21 Jan 2019, 4:52 pm
மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக சென்ற ஆண்டு வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்பு, அரவிந்த்சாமி, விஜயசேதுபதி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ், நடிகைகள் ஜோதிகா, ஐஸ்வர்யாராஜேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
Samayam Tamil nani


அதையடுத்து இயக்குனர் மணிரத்னம், மீண்டும் மல்டி ஸ்டார்களை வைத்து தனது கனவு படமான பொன்னியின் செல்வனை இயக்க தற்போது ரெடியாகி விட்டார். இந்த படத்தில் விக்ரம், சிம்பு, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் நானியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், செக்கச்சிவந்த வானம் படத்திலேயே நானியை ஒரு வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். ஆனால் அப்போது நானி வேறு படங்களில் பிசியாக இருந்ததால் அவருக்குப் பதிலாக அந்த வேடத்தில் அருண்விஜய்யை நடிக்க வைத்தாராம்.

ஆனால், தன்னுடைய அடுத்தப் படத்தில் நானியை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தார் மணிரத்னம். ஆகையால் இந்தப் புதிய படத்தில் நானியையும் சேர்த்துக் கொண்டார் மணிரத்னம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்