ஆப்நகரம்

அடுத்தடுத்து இறந்த பிரபல தொலைக்காட்சி நடிகர்கள்!

பிரபல தொலைக்காட்சி நடிகர்கள் கரண் பரஞ்பே மற்றும் நரேந்திர ஜா ஆகியோர் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.

Samayam Tamil 27 Mar 2018, 5:29 pm
பிரபல தொலைக்காட்சி நடிகர்கள் கரண் பரஞ்பே மற்றும் நரேந்திர ஜா ஆகியோர் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.
Samayam Tamil naradra-jha


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தில் மில் கயி’ என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் கரண் பரஞ்பே. இவருக்கு வயது 26. அந்த தொடரில் ஜிக்னேஷ் என்ற ஆண் நர்ஸாக நடித்துள்ளார். அதிலிருந்து ரசிகர்கள் அவரை ஜிக்னேஷ் என்றே அழைத்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஜிக்னேஷ் படுக்கையில் பிணமாக கிடந்துள்ளார். படுக்கையறையில் பிணமாகக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் அவரது தாய்.

இதனை தொடர்ந்து கரணுக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. கரணின் மரண செய்தி அறிந்து அவருடன் நடித்த கலைஞர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.

இதற்கு முன் சாந்தி உள்ளிட்ட பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் நரேந்திர ஜா. இவர் கடந்த 14ஆம் தேதி புனேவில் காலமானர். இதையடுத்து தற்போது கரண் இறந்துள்ளார். அடுத்தடுத்து தொலைக்காட்சி பிரபலங்களை இறந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்