ஆப்நகரம்

கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளாதான் பெஸ்ட் – பாா்த்திபன் கருத்து

கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்து விளங்குவதாக நடிகா் பாா்த்திபன் கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 19 Jan 2018, 8:49 pm
கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்து விளங்குவதாக நடிகா் பாா்த்திபன் கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil actor parthiban comments on freedom of speech
கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளாதான் பெஸ்ட் – பாா்த்திபன் கருத்து


தண்ணீா் பிரச்சினையையும், இதனால் தமிழகம் மற்றும் கேரளா எல்லைப்பகுதிகளில் நடைபெறக்கூடிய சம்பவங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் கேணி. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டன. நடிகா் பாா்த்திபனும் கலந்து கொண்டாா்.

அப்போது நடிகா் பாா்த்திபன் பேசுகையில், நமது நாடு பசுமை பூங்காவாக திகழ வேண்டுமென்றால் தண்ணீா் அவசிம். தண்ணீா் பிரச்சினை தீரவேண்டுமென்றால் நாட்டில் உள்ள நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்று பலா் கருத்து தொிவித்து வருகின்றனா். அதற்கு முதலில் அனைவரது மனமும் இணைய வேண்டும்.

பொதுவாக நீர் பிரச்சினை என்பது தமிழர்கள் சம்பந்தப்பட்டதோ, மலையாளிகள் சம்பந்தப்பட்டதோ இல்லை. அது மனிதர்கள் சம்பந்தப்பட்டது. தண்ணீரை வைத்துக் கொண்டு கேரளாவோ தமிழ்நாடோ அரசியல் செய்யலாம், ஆனால் கலைஞர்கள் அந்த அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.

தமிழகத்தை விட கேரளாவில் கலைஞர்களுக்கான சுதந்திரம் என்பது அதிகமாக இருக்கிறது. அங்கே திருவனந்தபுரம் ராஜாவைக் கூட விமர்சனம் செய்யலாம், இங்கே யாரையுமே விமர்சனம் செய்ய முடிவதில்லை. அதனால் தான் நல்ல விசயத்தை சொல்லும் இந்த கேணி படத்திற்குள் என்னையும் இணைத்துக் கொண்டேன்.

தமிழகத்தில் இப்போதெல்லாம் சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் பார்க்கப் போனால் கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்து விளங்குகிறது. இந்தப் படம் நல்ல தீர்வை நோக்கி அழைத்துச் செல்லும் என்பது பாராட்டிற்குரியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்