ஆப்நகரம்

100% அக்மார்க் குறும்பு செய்தேன் - அயோக்யா சர்ச்சைக்கு பார்த்திபன் விளக்கம்!

அயோக்யா திரைப்படம் குறித்து வெளியான சர்ச்சைக்கு, நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 14 May 2019, 8:05 pm
விஷால் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘அயோக்யா’. இதில் வில்லன் வேடத்தில் பார்த்திபன் நடித்துள்ளார். கடைசி நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படம் வெளியீடு தள்ளிப் போனது.
Samayam Tamil Parthiban


இதுபற்றி குறிப்பிட்டிருந்த பார்த்திபன், இது அயோக்கியத்தனம். இதனால் தயாரிப்பாளர், நாயகனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு அளவே இல்லை என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து படம் ரிலீஸானது.

இந்நிலையில் படத்தைப் பார்த்த பிறகு, மற்றொரு டுவிட் போட்டுள்ளார். அதில், 'அயோக்கியா'த்த்தனம்! 94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே'படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது!


அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு'அ-தனம்'?குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி?வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது படம் காப்பியடித்து எடுக்கப்பட்டதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பலரும் அவரைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் டுவிட் போட்டுள்ள பார்த்திபன், விஷாலுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. வழக்கமான என் (100%உண்மையான)அக்மார்க் அக்குறும்பே என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்