ஆப்நகரம்

சோழ மன்னராக அவதாரமெடுக்கும் தனுஷ்: 'பொன்னியின் செல்வன்' நடிகர் சொன்ன மாஸ் தகவல்.!

செல்வராகவன் இயக்கவுள்ள 'ஆயிரத்தில் ஒருவன்' இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிப்பார் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Oct 2022, 6:47 pm
கடந்த 2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். பெரும் பொருட்செலவில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் வெளியான சமயத்தில் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
Samayam Tamil தனுஷ்
தனுஷ்


இதனால் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவை கைவிட்டார் செல்வராகவன். அதன் பின்னர் சில வருடங்கள் கழித்து ஆயிரத்தில் ஒருவன் பட மேக்கிங் குறித்து பிரம்மிப்பாக வலைத்தளங்களில் பேச ஆரம்பித்தனர் ரசிகர்கள். இதனால் இந்த படத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. பலரும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வேண்டும் என செல்வராகவனிடம் கேட்க ஆரம்பித்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு புதிய போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் செல்வராகவன். இதில் தனுஷ் நடிப்பதாகவும், படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Suriya: இசைப்புயலுக்கு நன்றி தெரிவித்த தேசிய விருது நாயகன் சூர்யா..!

இந்நிலையில் நேற்று வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை நடிகர் பார்த்திபன் தஞ்சாவூரில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று பார்த்துள்ளார். பிறகு தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார்.


அப்போது, "ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் மறுபடியும் வரும். ஆனால் எனக்கு பதில் தனுஷ் அந்த ரோலில் நடிப்பார். முதல் பாகத்திலே தனுஷ் நடிப்பதாக இருந்தது. அதற்கு பதில் தான் நான் நடித்தேன். இப்போது இரண்டாம் பாகத்தில் நான் நடிப்பதற்கு பதில் தனுஷ் நடிப்பார். அவர் நடித்தால் அது சிறப்பாகவே இருக்கும்" என தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்