ஆப்நகரம்

ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு நன்றி: நடிகர் பசுபதி நெகிழ்ச்சி!

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்தது குறித்து நடிகர் பசுபதி நெகிழ்ச்சியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 30 Jul 2021, 2:47 pm
கடந்த வாரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் அமேசான ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. பாக்சிங்கை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு திரையுலக பிரபங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ள நடிகர் பசுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil Sarpatta Parambarai
Sarpatta Parambarai


சார்பட்டாவில் பாக்ஸிங் வீரராக கபிலன் கதாபாத்திரத்தில் ஆர்யா, ரங்கன் வாத்தியாராக பசுபதி நடித்துள்ளனர். இவர்களுடன் அனுபாமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் குறித்து அனைவரும் பாசிட்டிவான கருத்துகளையே கூறி வருகின்றனர்.

வடசென்னையில் எண்பதுகளில் பிரபலமாக இருந்த குத்துச் சண்டை அணிகளைப் பற்றி அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் தனித்தனியாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக திமுகவை சார்ந்த ரங்கன் வாத்தியாராக நடித்துள்ள பசுபதி நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. அவரின் நடிப்பிற்கு அனைவரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

'ராதே ஷ்யாம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: உற்சாகத்தில் பிரபாஸ் ரசிகர்கள்!
இந்நிலையில் சார்பட்டா படத்தில் நடித்தது குறித்து நடிகர் பசுபதி நெகிழ்ச்சியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக நீலம் பிக்சர்ஸ் & K9 ஸ்டுடியோ தயாரிப்பில் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ சென்னையின் வாழ்வியலையும் , பாக்சிங்கையும் களமாக கொண்ட யதார்த்தமான படைப்பை பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.

தான் எடுத்து கொண்ட கதையை, சொல் நேர்த்தி.. செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர், பா.இரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்,நெருக்கமானவன். நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது.

என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள். ஏறக்குறைய 22 ஆண்டுகள் என்னுடைய திரை பயணத்தில் என்னுடன் பயணித்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் , தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் , ஊடக நண்பர்களுக்கும் , சமூக வலை தளங்களுக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் இருக்கின்ற ரசிகர்களுக்கும் நன்றிகள் பல” எனத் தெரிவித்துள்ளார். மேலும் தான் எந்த சோஷியல் மீடியாவிலும் இல்லை என்பதையும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பசுபதி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்