ஆப்நகரம்

கமல் வழியில் களமிறங்கிய சரத்குமார்!

நடிகர் கமல் மக்களுடன் தொடர்புகொள்ள மையம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்த உள்ள நிலையில், நடிகர் சரத்குமாரும் அனைத்து தரப்பு மக்களும் செல்போன் மூலம் நேரடியாக தொடர்புகொள்ள ‘செயலி’ ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளார்

TNN 12 Dec 2017, 7:59 pm
நடிகர் கமல் மக்களுடன் தொடர்புகொள்ள மையம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்த உள்ள நிலையில், நடிகர் சரத்குமாரும் அனைத்து தரப்பு மக்களும் செல்போன் மூலம் நேரடியாக தொடர்புகொள்ள ‘செயலி’ ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil actor politician sarath kumar has launched a new mobile called ask to communicate with public
கமல் வழியில் களமிறங்கிய சரத்குமார்!


நடிகர் சரத்குமார் செல்போன் மூலம் அனைத்து தரப்பு மக்களுடனும் நேரடியாக தொடர்புகொள்ளவும், கருத்துக்களை பறிமாறவும் செல்போன் செயலி(அப்) ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார். அதற்கு ஏஎஸ்கே என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயலியை செல்போனில் பதிவு செய்து கொள்வதன் மூலம், சரத்குமாருடன் நேரடியாக கருத்துக்களை பறிமாறிக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தினமும் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணவும், சமூக சீர்திருத்தத்துக்கும் உதவும் வகையிலும் பொது மக்கள் எளிதில் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சரத்குமாரின் சமூக நல சிந்தனைகளும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் நடந்த இந்த செயலி வெளியீட்டு விழாவில் சரத்குமார், ராதிகா சரத்குமார்,வரலட்சுமி, ரெய்னே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்