ஆப்நகரம்

Prabhas: பிரபல நடிகையுடன் 'பாகுபலி' ஹீரோவுக்கு மலர்ந்த காதல்: தீயாய் பரவும் தகவல்.!

'ஆதிபுருஷ்' படத்தில் நடித்த போது இந்தி நடிகை கிருத்தி சனோனுக்கு பிரபாஸ் புரபோஸ் செய்ததாக இணையத்தில் தீயாய் செய்திகள் பரவி வருகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 29 Nov 2022, 9:00 am
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் பிரபாஸின் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்த 'ஆதிபுருஷ்' படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது.
Samayam Tamil Prabhas
Prabhas


ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார்ர். ராவணன் கேரக்டரில் சைஃப் அலி கான் இடம்பெற்றுள்ளார். இந்தப்படத்தில் நடித்தபோது பிரபாஸுக்கும், க்ரித்தி சனோனுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேசப்படுகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆதிபுருஷ் படத்தில் ராமர் வேடத்தில் பிரபாசும், சீதை கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை க்ரித்தி சனோனும் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது.

Varisu: 'வாரிசு' பட பிரச்சனை குறித்து முதன்முறையாக வாய் திறந்த தயாரிப்பாளர்: என்ன சொல்லிருக்காரு தெரியுமா.?

சமீபத்தில் க்ரித்தி சனோன் அளித்த பேட்டியில், ''பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார். இருவரும் காதலிப்பதை இந்தி நடிகர் வருண் தவானும் மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளார்.

The Kashmir Files: மோசாமான வெறுப்புணர்வை தூண்டும் படம்: சர்வதேச அரங்கில் விளாசிய நடுவர்.!

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக 'ஆதிபுருஷ்' படப்பிடிப்பின் போது க்ரித்தி சனோனுக்கு பிரபாஸ் புரபோஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. ஆனால் காதலிப்பதை இருவருமே உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்