ஆப்நகரம்

காவிரிக்கும், காலாவுக்கும் என்னப்பா சம்பந்தம்; படத்தை ரிலீஸ் பண்ண விடுங்கபா: பிரகாஷ் ராஜ்!

காலா படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Samayam Tamil 3 Jun 2018, 11:01 pm
பெங்களூரு: காலா படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
Samayam Tamil Prakash Raaj


பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் ‘காலா’. இப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அம்மாநில திரைப்பட வர்த்தக சபை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், காவிரி விவகாரம் பேசும் போது, உணர்ச்சி வசப்பட்டு விடுகிறோம். இது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டது.

இந்த விவகாரத்தை இருமாநில அரசுகளும், மத்திய அரசு மற்றும் வல்லுநர் குழுவோடு இணைந்து, நமது விவசாயிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.


இந்த சூழலில் காலா திரைப்படத்தை வெளியாகாமல் தடுத்து என்னச் செய்யப் போகிறோம்? ரஜினி கூறிய கருத்து நம்மை கடுமையாக பாதித்தது உண்மை தான். நான் ஒப்புக் கொள்கிறேன்.

ஒருவேளை படம் வெளியாகி, அதைப் பார்க்காமல் மக்கள் புறக்கணித்தால், அப்போது நாம் தெரிந்து கொள்ளலாம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று. இதுபோன்ற சமூக விரோதிகள் தான் மக்கள் சார்பாக தீர்மானிக்கிறார்கள்.

மக்களுக்கு இது வேண்டும்; இது வேண்டாம் என முடிவு செய்ய இவர்கள் யார்? என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Actor Prakash Raaj raises voice against ban on releasing Kaala in Karnataka.

அடுத்த செய்தி

டிரெண்டிங்