ஆப்நகரம்

பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அழியாத கோலங்கள் 2’!

சென்னை: ‘அழியாத கோலங்கள் 2’ படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஹீரோவாக நடித்துள்ளார்.

Samayam Tamil 21 Nov 2018, 1:04 pm
எம்.ஆர்.பாரதி இயக்கியுள்ள படம் ‘அழியாத கோலங்கள் 2’. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரிராவ், நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
Samayam Tamil Prakash Raj


இந்தப் படம் குறித்து இயக்குனர் எம்.ஆர். பாரதி கூறுகையில், ‘‘பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவின் நினைவாக இந்தப்படத்திற்கு ‘அழியாத கோலங்கள் 2’ என பெயர் வைத்துள்ளோம். மற்றபடி அவர் இயக்கிய அழியாத கோலங்கள் படத்தின் கதைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் படம் ஒரு வங்காளப் படத்தின் ரீமேக்காகும்.

சாகித்ய அகடாமி விருது பெற்ற ஒரு எழுத்தாளன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் பழைய காதலியை பார்க்கச் செல்கிறார். அந்த ஒரு இரவில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்தப் படம் வங்காளத்தில் பல விருதுகள் வாங்கி சாதனை படைத்தன.

இந்தப் படத்தில் ஹீரோவாக (எழுத்தாளராக) பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அவரது மனைவியாக ரேவதியும், காதலியாக அர்ச்சனாவும் நடித்துள்ளனர். நடிகை ஈஸ்வரிராவ் செய்தியாளராகவும், நடிகர் நாசர் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்