ஆப்நகரம்

ரசிகனின் செல்போனை உடைத்த ''கோபக்கார'' வில்லன் நடிகர்!!

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்டி விட்டு பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 2 Mar 2017, 4:46 pm
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்டி விட்டு பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜ் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil actor prakash raj again into controversy
ரசிகனின் செல்போனை உடைத்த ''கோபக்கார'' வில்லன் நடிகர்!!


சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை 6.30 மணியளவில் வெளியூரில் இருந்து விமானம் மூலம் பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் வந்து இறங்கினார். அவர் விமானநிலையத்தை விட்டு வெளியேறும் வழியில் ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து இருந்தனர். இவரைப் பார்த்த அவர்கள் ஓடி வந்து அவருடன் செல்பி எடுக்க முயற்சித்தனர். இதனால் கோபமடைந்த பிரகாஷ் ராஜ் ரசிகர் ஒருவரின் செல்போனை வேகமாக தட்டி விட்டார். இதில் அந்த ரசிகரின் செல்போன் கீழே விழுந்து உடைந்தது.

இந்த சம்பவம் விமான நிலையத்தில் இருந்த ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அந்த இடத்தில் இருந்து பிரகாஷ் ராஜ் வேகமாக சென்று விட்டார்.

இதேபோல் கடந்த ஜனவரி மாதம் திருப்பதிக்கு பிரகாஷ் சென்று இருந்தபோது, அவரிடம் செய்தியாளர் ஒருவர் ஜல்லிக்கட்டு தொடர்பான கேள்வி எழுப்பினார். அப்போது அந்த செய்தியாளரை தாக்கியதுடன், அவரது கேமராவை பறித்து அதில இருந்த பதிவுகளை அழிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு முன்னதாக காவிரி விவகாரம் குறித்து கேட்டபோது வேகமாக அறையில் இருந்து வெளியேறினார்.

Actor Prakash Raj again into controversy!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்