ஆப்நகரம்

பெண்களை தெய்வமாக மதிப்போம் : நடிகர் பிரசன்னா!

எல்லா பெண்களையும் தெய்வமாக மதிப்போம் என்று நடிகர் பிரசன்னா ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

Samayam Tamil 17 Apr 2018, 4:31 pm
எல்லா பெண்களையும் தெய்வமாக மதிப்போம் என்று நடிகர் பிரசன்னா ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
Samayam Tamil EVM



நடிகர் பிரசன்னா, நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று பிரசன்னா, சினேகா ஜோடி, நடிகர் ஆர்யா கலந்து கொண்டு வரும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.


அப்போது நடிகர் பிரசன்னா பேசுகையில், “சினேகா மட்டுமில்லை நான் அனைத்து பெண்களையும் அதிகம் மதிக்கிறேன். குழந்தை பெற்றெடுக்கும் போது அவர்கள் படும் கஷ்டத்தை நேரில் பார்த்ததால் தான். சினேகா பிரசவத்தின் போது நார்மல் டெலிவரி ஆகவில்லை, அதனால் வலியை அதிகரிக்க ஒரு ஊசி போட்டார்கள். அதை பார்த்ததும் எனக்கே மயக்கம் வந்துவிட்டது. நீடில் அவ்வளவு பெரிதாக இருந்தது. நமக்கு தலைவலி வந்தாலே தாங்க முடியாது. ஆனால் பிரசவ வலியை ஒவ்வொரு அம்மாவும் எப்படி தாங்கினார்கள் என நினைத்தால் அவர்களை தெய்வமாக மதிப்போம்“ என்றார் நடிகர் பிரசன்னா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்