ஆப்நகரம்

Kerala Floods: கேரளா கனமழை வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட நடிகர் ப்ரித்விராஜின் தாய்..!!

கேரளாவில் பெய்து வரும் கனமழையில் சிக்கிக்கொண்ட நடிகர் ப்ரித்விராஜின் தாயார் படகு மூலம் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

Samayam Tamil 16 Aug 2018, 7:05 pm
கேரளாவில் பெய்து வரும் கனமழையில் சிக்கிக்கொண்ட நடிகர் ப்ரித்விராஜின் தாயார் படகு மூலம் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
Samayam Tamil 1534399885-Prithvi1.
கேரளா மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகர் தாய்


வரலாறு காணாத கனமழையில் சிக்கி தவித்து தத்தளித்து வருகிறது கேரளா மாநிலம். அங்குள்ள மொத்தம் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் ப்ரித்விராஜின் கொச்சி வீடு



இந்நிலையில் அங்கு பணியில் உள்ள 18-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர், வெள்ளத்தில் சிக்கித்தவித்து வரும் பொதுமக்களை பத்திரமாக காப்பாற்றி கரை சேர்த்து வருகின்றனர்.

இயற்கையின் முன்னால் அனைவரும் சமம் தானே. பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகரான ப்ரித்விராஜ் சுகுமாறனின் தாயாரான மல்லிகா சுகுமாறன் கனமழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

நடிகர் ப்ரித்விராஜின் தாய் மல்லிகா



கொச்சியில் வசித்து வரும் மல்லிகாவின் வீட்டில் தரைத்தளம் முழுவதும் தண்ணீர் புகுந்துவிட்டது. இந்நிலையில் மாடி அறையிலிருந்த அவரை, இளைஞர்கள் சிலர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் துயரத்திற்குள்ளாகியுள்ளது.


மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் இதுவரை 75 பேர் பலியாகியுள்ளனர். வரலாறு காணாத இயற்கை சீற்றத்தை சந்தித்து வரும் அம்மாநில மக்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மலையாளம், தமிழ் திரையுலக நடிகர்கள் நிவாரண உதவி அளித்துள்ளனர். மேலும் கேரள மக்களுக்கு உதவி செய்யுமாறு தமிழ் மற்றும் மலையாள நடிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்