ஆப்நகரம்

நிதின் சத்யா 2வது தயாரிப்பில் நடிகர் வைபவ்!

நடிகர் நிதின் சத்யா தயாரிக்கவுள்ள இரண்டாவது படத்தில் ஹீரோவாக நடிகர் வைபவ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 16 Mar 2019, 8:36 pm
நடிகர் நிதின் சத்யா தயாரிக்கவுள்ள இரண்டாவது படத்தில் ஹீரோவாக நடிகர் வைபவ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil vai.


சென்னை 28’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் நிதின் சத்யா. இந்தப் படம் 2007ல் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். அந்த படத்தில் பொறுப்புள்ள அண்ணனாக நடித்து இப்போது தயாரிப்பாளராக பதவியேற்றுள்ளார் நிதின் சத்யா. ஏற்கனவே ஜெய் நடிப்பில் வெளியான ‘ஜருகண்டி படத்தை இவர்தான் தயாரித்திருந்தார். இது இவர் தயாரிப்பில் வெளியான முதல் படம்.

தற்போது இரண்டவதாக ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளார் நிதின் சத்யா. இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதை. இந்தப் படத்தில்நடிகர் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் இணைந்து சில முன்னணி நடிகர்களும் நடிக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தின் இயக்குனர் யார் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்ற விவரம் இன்றும் வெளியாவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்