ஆப்நகரம்

புரளிகளை பரப்பாதீர் - நடிகர் சுந்தர்ராஜன் மகன் வேண்டுகோள்!

நடிகர் சுந்தர் ராஜன் உடல் நிலை குறித்து புரளிகள் கிளம்பியுள்ள நிலையில், அவரது மகன் அஷோக் சுந்தர்ராஜன் தனது முகநூலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Samayam Tamil 29 Feb 2020, 5:33 pm
நடிகர் சுந்தர் ராஜன் உடல் நிலை குறித்து புரளிகள் கிளம்பியுள்ள நிலையில், அவரது மகன் அஷோக் சுந்தர்ராஜன் தனது முகநூலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil sundarr


தனது முகநூல் பதிவில் அஷோக் கூறியிருப்பதாவது,

ஹாய் நண்பர்களே !

இவர் என்னுடைய அப்பா ஆர். சுந்தர்ராஜன். பிரபல தமிழ் இயக்குநர் மற்றும் நடிகரான இவர் மிகவும் நலமாக இருக்கிறார். சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இவரது உடல் நிலை குறித்து யாரும் வதந்தி கிளப்பாதீர்கள்.


இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் பங்காற்றி வருபவர் ஆர் சுந்தர்ராஜன். இவர் 20க்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியவரும் கூட.

கடைசியாக சுந்தர்ராஜன் பேரழிகி ஐஎஸ்ஓ படத்தில் நடித்திருந்தார். இவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் 2004ம் ஆண்டு நடைபெற்ற கார் விபத்தில் உயிரிழந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்