ஆப்நகரம்

Nayanthara Radha Ravi Controversy: கொலை குற்றமா பண்ணிட்டேன்: மன்னிப்பு கேட்க முடியாது: ராதா ரவி!

கொலை குற்றமா பண்ணிவிட்டேன்? என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Apr 2019, 6:20 pm
கொலை குற்றமா பண்ணிவிட்டேன்? என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Nayan


சக்ரி டோலட்டி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் கொலையுதிர் காலம். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. இதில், படக்குழுவினருடன் நடிகர் ராதா ரவியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நயன்தாரா பேயாகவும் வருகிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்று ஆரம்பித்து இறுதியில் நடிகைகளை நடிகர்கள் எங்கு வேண்டுமென்றாலும் தொட்டுக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் செய்தால் எந்த பிரச்சனையும் வராது என்று பேசினார். இது பலரது பாராட்டைப் பெற்றாலும், சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், ராதா ரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். சினிமா வட்டாரத்தில் ராதாரவியின் பேச்சுக்கு பூகம்பம் வெடித்தது. ராதாரவியின் சர்ச்சை கருத்துக்கு எதிராக நயன்தாராவும் அறிக்கை வெளியிட்டார். மேலும், விக்னேஷ் சிவன், ராதிகா, சின்மயி, வரலக்ஷ்மி, விஷால் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில், எனக்கு இன்னொரு முகம் இருக்கு என்ற குறும்பட வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவியும் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் கூறுகையில், கொலையுதிர் காலம் பிரச்சனையின் போது யாராவது மனம் வருத்தப்பட்டிருந்தால் அவர்களிடம் மனம் வருத்தப்படுகிறேன் என்று சொல்லுங்கள் என்று தான் நான் சொன்னேன். மற்றபடி, அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை.

மன்னிப்பு கேட்பது என்பது என் பரம்பரையிலேயே இல்லை. கொலை குற்றமா பண்ணிவிட்டேன், மன்னிப்பு கேட்பதற்கு? சிலர் நான் நடிப்பதை நிறுத்திவிடுவார்களாம். அதெல்லாம் முடியவே முடியாது. ஒருவேலை சினிமாவில் நடிப்பதற்கு பதிலாக நாடகத்தில் நடித்தால் என்ன செய்வார்களாம். அப்போ, உங்களால் ஒன்னும் செய்ய முடியாது. இதெல்லாம் ஒரு தற்காலிக பிரச்சனை தான். நான் சந்தித்தது ஒரு பிரச்சனையே இல்லை. நான் நிறைய பேசுவதற்கு காரணம் நான் நிறைய படிப்பது தான்.

நான் படம், குறும்படம், சீரியல், வெப் சீரிஸ் என்று எதில் நடித்தாலும் நான், எம்.ஆர். ராதா மகன் தான். அந்த அடையாளத்தை ஒருவராலும் மாற்ற முடியாது. என்னை கட்சியிலிருந்து வேண்டுமானால், நீக்கலாம், ஆனால், நான் மக்கள் மனதில் நீங்காத இடத்தில் இருப்பேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்