ஆப்நகரம்

"என் மனசு முழுக்க மெரினாவில்தான் இருக்கு"-ராகவா லாரன்ஸ் உருக்கம்...!

'மருத்துவமனையில் இருந்தாலும் என் இதயம் முழுவதும் மெரினாவில்தான் உள்ளது' என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

TNN 23 Jan 2017, 4:53 am
'மருத்துவமனையில் இருந்தாலும் என் இதயம் முழுவதும் மெரினாவில்தான் உள்ளது' என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actor raghava lawrance admitted in hospital due to fever and neck pain
"என் மனசு முழுக்க மெரினாவில்தான் இருக்கு"-ராகவா லாரன்ஸ் உருக்கம்...!


மெரினாவில் ஜல்லிக்கட்டு வேண்டி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆரம்பம் முதல் ஆதரவு தெரிவித்து வருகிறார்.கழுத்து வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்தாலும் கூட,அடிக்கடி மெரினா கடற்கரைக்கு வந்திருந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு காய்ச்சல் மற்றும் கழுத்து வலி அதிகரித்ததை தொடர்ந்து,மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையிலிருந்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”எனக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் கழுத்து வலி ஏற்பட்டுள்ளதால்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.அதனால்தான் இன்று என்னால் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.என்னுடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால்,நாளை கண்டிப்பாக மெரினா போராட்டத்தில் கலந்து கொள்வேன்.நான் மருத்துவமனையில் இருந்தாலும்,என் இதயம் மெரினா கடற்கரையில் உங்களுடன் தான் இருக்கிறது.நமது போராட்டத்தை கண்ணியமான முறையில் தொடருவோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Actor Raghava Lawrance admitted in hospital due to fever and neck pain

அடுத்த செய்தி

டிரெண்டிங்