ஆப்நகரம்

பிளாட்பாரத்தில் பிச்சையெடுத்த சிறுவனை வீட்டிற்கு அழைத்து உதவி செய்த ராகவா லாரன்ஸ்!

சிகிச்சைக்கு வழியில்லாமல் சென்னை ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களாக பிழைப்புக்காக பிச்சையெடுத்த சிறுவனை வீட்டிற்கு அழைத்து அவருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி செய்துள்ளார்.

Samayam Tamil 16 Jul 2019, 7:34 pm
ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் குருலெட்சுமி. இவரது மகன் சூர்யா. குருலெட்சுமிக்கு, வெங்கடேசன் என்ற ஒரு சகோதரன் இருக்கிறார். வினோத நோயால் பாதிக்கப்பட்ட நடக்கவும், பேசவும் முடியாமல் தவித்து வந்த சூர்யாவின் மருத்துவ உதவிக்காக ராகவா லாரன்ஸை தேடிசென்னை வந்துள்ளனர். ஆனால், சென்னை வந்த அவர்களுக்கு ராகவா லாரன்ஸ் முகவரி தெரியவில்லை. இந்த நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக பிளாட்பாரத்திலேயே தங்கியுள்ளனர். இவர்களின் பரிதாப நிலையை கண்ட பலரும் சாப்பாட்டிற்கு உதவி செய்துள்ளனர்.
Samayam Tamil Lawrence


இது குறித்து தகவலறிந்த ராகவா லாரனஸ் உடனடியாக அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். இன்று காலை முதல் வேலையாக தனது உதவியாளரை காரில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்து அவர்கள் 3 பேரையும் அழைத்து வர கூறியுள்ளார். பின்னர், அங்கு சென்றதும், அவர்களிடம் ராகவா லாரன்ஸ் உங்களை அழைத்து வர கூறியதாக சொன்னதும், உணர்ச்சிவசப்பட்ட அவர்களது கண்ணில் கண்ணீர் கொட்டியது.
காமெடி படத்தில் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையான அஞ்சலி!
இதையடுத்து, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ராகவா லாரன்ஸ் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இதுபற்றி ராகவா லாரன்ஸ் கூறுகையில், என்னை நம்பி வந்த 3 பேரும் கஷ்டப்பட்டதை பார்த்தமும் மிகவும் வருத்தமாக இருந்தது. வினோத நோயால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு எந்த மாதிரியான உதவிகள் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப உதவி செய்யப்படும்.
ராகவா லாரன்ஸ் முகவரி தெரியாததால், பிளாட்பாரத்தில் பிச்சையெடுக்கும் அவலம்!
வசூலில் பின்னும் பிறமொழிப்படங்கள்! தடுமாறும் தமிழ் சினிமா!!
எங்களால் முடியும் என்றால், அறக்கட்டளை மூலமாகவே அந்த சிறுவனுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து முறையான சிகிச்சை அளிக்கப்படும். ஒருவேளை எங்களால் முடியாதபட்சத்தில், அரசை அணுகுவோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்