ஆப்நகரம்

அரசுப் பள்ளியை சீரமைத்து பிறந்தநாளை கொண்டாடிய ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்தநாளை முன்னிட்டு அரசுப்பள்ளி ஒன்றை சீரமைத்து கொடுத்துள்ளார்.

Samayam Tamil 29 Oct 2018, 11:52 pm
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளியையும், செஞ்சி அருகில் உள்ள பள்ளியையும்சீரமைத்து கொடுத்துள்ளார்.
Samayam Tamil Raghava-Lawrence


அரசுப் பள்ளிகளுக்கு உதவ வருமாறு முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த பலர் தற்போது உன்னத நிலை அடைந்துள்ளார்கள். தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு எவ்வளவு தான் நிதி ஒதுக்கினாலும், இது என் பள்ளி, நான் படித்த பள்ளி என்ற எண்ணம் கொண்டவர்களின் துணை, அனைத்து அரசுப்பள்ளிகளையும் மெருகேற்றும். பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் தீட்டுதல், கழிப்பறை வசதி, இணைய வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் முன்வர வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையனின் இந்த வேண்டுகோளை ஏற்ற நடிகர் ராகவா லாரன்ஸ், தனது பிறந்தநாளை முன்னிட்டு அரசுப்பள்ளி ஒன்றை சீரமைத்துக் கொடுத்துள்ளார். நேற்று (அக்டோபர் 29) ராகவா லாரன்ஸின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு, சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளியையும், செஞ்சி அருகில் உள்ள பள்ளியையும் தத்து எடுத்தார். மேலும், பள்ளியில் பழைய கட்டிடங்களை சீரமைத்து வர்ணம் பூசி கொடுத்துள்ளார். இதனால், அந்த இரு பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக பொழிவு பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்