ஆப்நகரம்

Rajini: பிரதமரின் பேச்சை தட்டாமல் பாலோ பண்ணும் ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்.!

பிரதமரின் கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டு வாசலில் தேசியக்கொடி ஏற்றியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 13 Aug 2022, 8:30 am
நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் ஒன்றிய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக 'இல்லம் தோறும் தேசிய கொடி' என்ற திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது.
Samayam Tamil ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்


அதன்படி, வருகிற 13-ந் தேதி முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் நமது தேசிய கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்றும் பிரதமர் மோதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதையடுத்து பா.ஜ.க. வினர் பலரும் தங்களது சமூக ஊடக பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார். மேலும் மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்டோரும் தங்களது முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்தனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் பிரதமர் விடுத்துள்ள மற்றொரு கோரிக்கையையும் ஏற்றுள்ளார். அதன்படி தன் வீட்டிற்கு முன்பு தேசிய கோடியை பறக்கவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viruman: கார்த்தி சினிமா வாழ்க்கைல இதுதான் பெஸ்ட்: அடிச்சு தூக்கும் 'விருமன்'..!

அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்ட ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக 'அண்ணாத்த' படம் வெளியானது. இதனையடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பில் ரஜினி விரைவில் கலந்து கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்