ஆப்நகரம்

கோபத்தில் கொந்தளித்த ரஜினி: செய்வதறியாமல் தவிக்கும் ஐஸ்வர்யா..!

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் பாலிவுட்டில் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலையில் படு பிசியாக இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Samayam Tamil 30 Mar 2022, 7:20 pm
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பிசியாக ஈடுபட்டு வருகிறார். அண்மையில் இவரின் 'முசாபிர்' ஆல்பம் பாடல் வெளியானது. இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஐஸ்வர்யா புதிய படம் ஒன்று இயக்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நேரடியாக பாலிவுட்டில் இயக்குனராக தடம் பதிக்கவுள்ளார்.
Samayam Tamil Aishwarya Rajinikanth
Aishwarya Rajinikanth


இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பயணி ஆல்பம் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதனை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், மற்ற மொழிகளில் மோகன்லால், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

பிரம்மாண்ட இயக்குனர் வீட்டில் விசேஷம்: பரபரக்கும் கோலிவுட்..!
அதனை தொடர்ந்து பாலிவுட் படம் ஒன்றையும் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ஐஸ்வர்யா. விவாகரத்து அறிவிப்பிற்கு தன்னுடைய சினிமா சம்பந்தமான பணிகளில் படு பிசியாக ஈடுபட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அதே நேரம் தனுஷ் சினிமாவில் பிசியாக இருந்தாலும், தனது மகன்களுடன் நேரம் செலவிட்டு வருகிறார். 'நானே வருவேன்' படப்பிடிப்பு தளத்தில் தனது மகன் யாத்ராவுடன் தனுஷ் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அண்மையில் இளையராஜாவின் இசை கச்சேரிக்கும் தனது இரு மகன்களையும் அழைத்து சென்றிருந்தார் தனுஷ். மகன்களும் அப்பாவுடன் இருப்பது ஜாலியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேள்விப்பட்ட ரஜினி கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். முதலில் குடும்பம். அதுக்கப்புறம் தான் வேலை எல்லாம் என்று தனது மனைவியிடம் சத்தம் போட்டுள்ளார். இதனை தொடர்ந்து அப்பாவின் கோபத்தை குறைக்க தற்போது மகன்களுடன் நேரம் செலவிட்டு வருகிறாராம் ஐஸ்வர்யா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்