ஆப்நகரம்

இந்த பெண்ணை தான் கட்டிக்கப் போகிறாராம் நம்ம பாகுபலி பல்லா

நடிகர் ராணா போட்ட ட்வீட்டை பார்த்து ரசிகர்கள் படுகுஷியாகியுள்ளனர்.

Samayam Tamil 12 May 2020, 5:09 pm
பாகுபலி படத்தில் பல்லாவாக நடித்து தமிழ் ரசிகர்களை மிரட்டிய ராணா மொரட்டு சிங்கிள் கிளப்பின் நிரந்தர உறுப்பினராகிவிடுவாரோ என்று அவரின் ரசிகர்கள் பயந்தார்கள். காரணம் அவர் வாழ்வில் காதல் வருவதும், போவதுமாக இருந்தது.
Samayam Tamil rana daggubati


இந்நிலையில் ராணா மிஹீகா பஜாஜ் என்பவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, அவர் சம்மதம் சொல்லிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
அந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, வாழ்த்துக்கள் ராணாகாரு. விரைவில் திருமணத்தை எதிர்பார்க்கலாம் போன்று. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஆனால் நல்லது நடந்திருக்கிறது. விரைவில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ராணாவின் பெயர் அடிக்கடி த்ரிஷாவுடன் சேர்ந்து தான் அடிபட்டது. அண்மையில் த்ரிஷா ராணாவுடன் வீடியோ கால் செய்தபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட அதை பார்த்தவர்கள் காதல் புதுப்பிக்கப்படுவது போன்று இருக்கிறதே என்று பேசத் துவங்கினார்கள்.

ராணாவும், த்ரிஷாவும் தான் மீண்டும் சேரப் போகிறார்கள் என்று பேச்சு கிளம்பிய நேரத்தில் அது பொய் என்பதை ஒரு ட்வீட் போட்டு காட்டிவிட்டார் ராணா.

சில் பண்ணலாம் வாங்கன்னு ரஷ்மிகாவை அழைத்த விஜய்: வேறு மாதிரி பேசும் நெட்டிசன்ஸ்

அடுத்த செய்தி

டிரெண்டிங்