ஆப்நகரம்

கொரோனா ; அட்வைஸ் பண்ண நடிகருக்கு அடி உதை!

கொரோனா குறித்தும் சோசியல் டிஸ்டன்சிங் குறித்தும் அட்வைஸ் பண்ண நடிகரை அடித்து உதைத்ததாக ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது

Samayam Tamil 9 Apr 2020, 11:46 am
கொரோனா நேரத்தில் கூட்டமாக நிற்காதீர்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று அட்வைஸ் செய்த நடிகர் ரியாஸ்கானை, ஒருவர் அடித்து உதைத்ததாக வழக்கு பதிவாகியுள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil riyaz khan


உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் அதிக அளவில் பரவி வரும் வேளையில், இந்தியாவில் லாக்டவுன் 16வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. சினிமா மற்றும் டிவி பிரபலங்கள் சமூக வலைதளங்களிலேயே பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் நல்ல உள்ளத்தோடு கொரோனா குறித்தும் அதை பரவாமல் பாதுகாத்துக் கொள்வது குறித்த தகவல்களை மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர். அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நடிகர் ரியாஸ்கானும் இதுபோன்ற ஒரு அறிவுரையை வழங்கியபோது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் ரியாஸ்கானை அடித்ததாக வழக்கு பதிவாகியுள்ளது. பனையூரில் வசித்துவரும் அவர் தினமும் வாக்கிங் செல்வது வழக்கமாம். அப்படி வாக்கிங் செல்லும்போது சிலர் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் போய் அட்வைஸ் செய்துள்ளார் ரியாஸ்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் ரியாஸ்கானை தாக்கியதாக கண்ணத்தூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்