ஆப்நகரம்

ஆடை பட இயக்குனருடன் இணையும் நடிகர் சந்தானம்?: இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

நடிகர் சந்தானம் அடுத்ததாக ஆடை, மேயாத மான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 21 Jun 2021, 12:53 pm
லொள்ளு சபா நிகழ்ச்சியின் பிரபலமான சந்தானம் திரைப்படங்களில் காமெடியனாக தலைகாட்ட துவங்கினார். அதனை தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் படங்களில் தவறாமல் சந்தானத்தின் காமெடிகள் இடம்பெற துவங்கின. காமெடியனாக கலக்கி கொண்டிருந்த சமயத்திலே ஹீரோவாகவும் களமிறங்கினார் சந்தானம். சமீப காலமாக காமெடியன் ரோலில் நடிப்பதை தவிர்த்து முழு நேர ஹீரோவாகவே நடித்து வருகிறார் சந்தானம்.
Samayam Tamil Santhanam_Rathna kumar
Santhanam_Rathna kumar


சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வரிசையில் உள்ளது. டிக்கிலோனா, சர்வர் சுந்தரம், சபாபதி என பிசியாக நடித்து கொண்டு வருகிறார். இதில் சபாபதி படத்தின் படப்பிடிப்பு பணிகள் மட்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக இன்னும் முடிவடையாமல் உள்ளது.

திருடப்பட்டதா..? நாட் ஏ காமன் மேன் டைட்டில்: விஷால் மீது உதவி இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு!
இந்நிலையில் சந்தானத்தின் அடுத்த திரைப்படம் குறித்த செய்திகள் இணையத்தில் கசிந்துள்ளன. அதன்படி மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய ரத்ன குமார் இயக்கத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ரத்ன குமார், கடந்த பொங்கலுக்கு விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த மாஸ்டர் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்