ஆப்நகரம்

கஷ்டமான நேரத்தில் முன்னணி தெலுங்கு ஹீரோ செய்த உதவி: பேட்டியில் கண்கலங்கிய சரத்குமார்

தான் பணக்கஷ்டத்தில் இருந்த நேரத்தில் சிரஞ்சீவி செய்த உதவி பற்றி சரத்குமார் கண்ணீர் மல்க பேசியுள்ளார். வீடியோ உள்ளே..

Samayam Tamil 11 May 2020, 11:12 am
தற்போது கொரோனா லாக்டவுன் நேரம் என்பதால் பிரபலங்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பேட்டி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் வீட்டில் இருந்தே ஒரு தெலுங்கு டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளனர்.
Samayam Tamil Sarath Kumar


அந்த பேட்டியில் பேசும்போது நடிகர் சிரஞ்சீவி பற்றி உருக்கமாக கண்கலங்கி பேசியுள்ளார் சரத் குமார்.

"சிரஞ்சீவி எனக்கு பல உதவிகள் செய்துள்ளார். ஒரு முறை நான் பணக்கஷ்டத்தில் இருந்தபோது அவரது கால்ஷீட் தேதிகள் கிடைத்தால் அதை வைத்து எடுக்கும் படத்தில் கிடைக்கும் லாபத்தை தருவதாக ஒரு தயாரிப்பாளர் கூறினார். நான் சிரஞ்சீவி உடன் இரண்டு படங்களில் பணியாற்றி உள்ளேன். அவரை சந்திக்க அனுமதி கேட்டேன். வரச்சொன்னார்."

"நான் சென்றபோது ஹைதராபாத்தில் அவர் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார். பர்சனலாக பேச வேண்டும் என கூறினேன். அவர் இயக்குனரை அழைத்து ஷூட்டிங்கை நிறுத்தும்படி கூறினார். என்னுடன் பேசுவதற்காக ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு வந்தார் என்பது எனக்கு ஷாக்காக இருந்தது. அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். வீட்டில் சாப்பிட்டோம்"

"அதன் பிறகு 'என்ன பிரச்சனை?' என கேட்டார். பிரச்னையை சொல்லி, உங்கள் தேதிகள் வேண்டும் என அவரிடம் கேட்டதற்கு, உடனே தான் நடித்துவரும் படம் முடிந்தபிறகு தருவதாக சொன்னார்."

"அதன் பிறகு சம்பளம் பற்றி கேட்டதற்கு.. "நீ எனக்கு remuneration தரியா.. எனக்கு சம்பளம் வேண்டாம், உன் பிரச்சனைகள் தீரட்டும்' என பதில் கூறினார் சிரஞ்சீவி" என சரத்குமார் கண்கலங்கி அழுதுகொண்டே கூறியுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களை உருக்கமடைய வைத்துள்ளது. இதோ..

அடுத்த செய்தி

டிரெண்டிங்