ஆப்நகரம்

கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உதவிய நடிகர் சசிகுமார்

வாழை விவசாயம் செய்து கொரோனாவால் நஷ்டத்தில் இருக்கும் விவசாயிக்கு நடிகர் சசிகுமார் பண உதவி கொடுத்துளளார்.

Samayam Tamil 8 May 2020, 10:21 am
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil Sasikumar


விவசாய பணிகளில் ஈடுபட முடியாமல் விவசாயிகளும் இதனால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விளைந்த பொருட்களை வாங்க யாரும் இல்லை என்பதால் அவை வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த விவசாயி ஒருவர் வாழை பயிரிட்டு உள்ள நிலையில் அதை வாங்க நஷ்டத்தில் இருப்பதாக உதவி கேட்டு வீடியோவில் பேசி இருந்தார். அதை கத்துக்குட்டி என்ற படத்தின் இயக்குனர் இரா.சரவணன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

"வெளிநாட்டு வாழ்க்கை வேணாம்னு துபாய்ல இருந்து ஊருக்கு வந்து, இந்த வருஷம் 3.5 ஏக்கர் வாழை போட்டேன். தார் வெட்டுற பருவம். நல்லா விளைஞ்சு நிக்குது. ஆனா வெட்ட வழியில்லை. நட்டாத்துல நிக்கிறேன். யாராவது உதவுங்களேன்" எனக் கதறுகிறார் மதுரை, மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன்" என இரா.சரவணன் தெரிவித்திருந்தார்.

அதை பார்த்துவிட்டு அந்த விவசாயிக்கு நடிகர் சசிகுமார் 25 ஆயிரம் ரூபாய் பண உதவி செய்துள்ளார்.

”வாழை அறுவடைக்கு வழியின்றி சிரமப்பட்ட இந்த விவசாயிக்கு 25,000 பண உதவி செய்திருக்கிறார் நடிகர் சசிகுமார். “சசி சார் உதவியா கொடுத்தாலும் அதை கடனா நினைச்சு, அடுத்த சாகுபடியில் நிச்சயம் அவருக்குத் திருப்பிக் கொடுப்பேன்” என்கிறார் விவசாயி கோபாலகிருஷ்ணன். நல்ல மனம் வாழ்க” என சரவணன் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்